அருணாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

இட்டாநகர்; அருணாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
லாங்டிங் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பொங்சாவ் என்ற பகுதியில் சந்தேக நபர்களின் நடமாட்டம் இருப்பதாக ஊகித்தனர்.
இதையடுத்து, அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று நடமாடி வருவதை கண்டறிந்தனர். பாதுகாப்பு படையினர் வந்ததை அறிந்த அந்த கும்பல் திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சிறிது நேர துப்பாக்சிச் சண்டைக்கு பின்னர் பயங்கரவாதிகள் எல்லை பகுதியின் வழியாக மியான்மருக்குச் தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து அருணாச்சலபிரதேசம், மியான்மர் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும்
-
தேர்தல் முடிவு விவகாரம்: தேர்தல் கமிஷன் விளக்கம்: ஏற்க ராகுல் மறுப்பு
-
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: உக்ரைனில் 3 பேர் பலி
-
சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி; சேலத்தில் சோகம்
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 56 பேர் பலி; தாய்லாந்து பிணைக்கைதி உடல் மீட்பு
-
போதிய பஸ் வசதி இல்லாமல் பொது மக்கள் அவதி: திமுக அரசு மீது இ.பி.எஸ்., சாடல்
-
பேரிடரை எதிர்கொள்ள உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியம் அவசியம்; பிரதமர் மோடி வலியுறுத்தல்