தொழில் முதலீட்டுக் கழக சிறப்பு முகாம்; ரூ.1.5 கோடி வரை அரசு மானிய கடனுதவி

விழுப்புரம்; தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில், சிறப்பு தொழிற் கடன் முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின், விழுப்புரம் கிளை மேலாளர் இளவரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தொழிற்சாலைகளுக்கு கடனுதவி மற்றும் மானிய சலுகைகளை வழங்கி வருகிறது.

விழுப்புரம் ஹோட்டல் உட்லண்ஸ் காம்பளக்ஸ் முதல் மாடியில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில், கடந்த 2ம் தேதி துவங்கிய சிறப்பு முகாம், வரும் 30 ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் மாநில அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் போன்றவை குறித்த விரிவான விளக்கம் தரப்படுகிறது.

தகுதி பெறும் தொழில்களுக்கு, தமிழக அரசின் 25 சதவீதம், 35 சதவீதம் மற்றும் 40 சதவீதம் முதலீட்டு மானியம், அதிகபட்சமாக ரூ1.5 கோடி வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணம் முழுவதும் 100 சதவீத விலக்கு அளிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு 94437 84818 என்கிற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement