வித்யா சமிக் ஷா கேந்திரா மையம்; அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு

புதுச்சேரி; புதுச்சேரி கல்வித்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வித்யா சமிக் ஷா கேந்திரா மையத்தை அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு செய்தார்.
நாடு முழுதும் 14 மாநிலங்களில் வித்யா சமிக் ஷா கேந்திரா மையம் அமைக்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட உள்ளது. புதுச்சேரி கல்வித்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வித்யா சமிக் ஷா கேந்திரா மையத்தை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, புதுச்சேரியின் தனித்துவமான கல்வி நிலப்பரப்பு, தேவைகளுக்கு ஏற்ப டேஷ்போர்டு மற்றும் தரவு பகுப்பாய்வு கூறுகளை மாற்றியமைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும்,நிகழ் நேர தரவு கண்காணிப்பு, பள்ளி செயல்திறன் மற்றும் சரியான நேரத்தில் தலையீடு உத்திகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தினார்.
வித்யா சமிக் ஷா கேந்திரா மையம் மூலம் பள்ளிக் கல்வியில் தரவு சார்ந்த நிர்வாக செயல்பாடு, மாணவர் கற்றல் முடிவுகள், ஆசிரியர் வருகை, திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த பள்ளி செயல்திறன் போன்றவை கண்காணிப்பு செய்ய முடியும். இந்த முன் முயற்சியானது, கல்வி முறையில் வெளிப்படைத் தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான யூடியின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும்' என்றார்.
ஆய்வின்போது, பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, சமக்ரா சிக் ஷா மாநில திட்ட இயக்குநர் எழில்கல்பனா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும்
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
-
சர்வதேச சந்தையில் வலிமை பெறலாம்; ரெப்போ ரேட் குறைப்புக்கு வரவேற்பு
-
ஆன்லைன் வாயிலாக ரூ. 73.27 லட்சம் மோசடி: திருச்சூரை சேர்ந்த வாலிபர் கைது
-
காங்கிரஸ் மூத்த தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை மரணம்