நான் இல்லையெனில் டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார்: அடித்து சொல்கிறார் எலான் மஸ்க்

வாஷிங்டன்: ''நான் இல்லையெனில் டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார்'' என தொழில் அதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்புக்கு, பிரபல தொழிலதிபரும், 'ஸ்பேஸ் எக்ஸ்' விண்வெளி தொழில்நுட்ப நிறுவனருமான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்தார்; நிதியுதவியும் செய்தார். கடந்த ஜனவரியில், அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும், அரசின் செலவை குறைக்கவும், திறனை மேம்படுத்தவும் சிறப்பு துறையை உருவாக்கினார். இதன் தலைவராக எலான் மஸ்க் இருந்தார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால், சமீபத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலகினார். இந்நிலையில், டிரம்ப் அரசு சார்பில் புதிய செலவு மற்றும் வரி மசோதாவை செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கும் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், எலான் மஸ்குக்கு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தன் சமூக வலைதள பக்கத்தில், 'நமது பட்ஜெட்டில், பில்லியன் கணக்கான டாலர்களில் பணத்தைச் சேமிப்பதற்கான எளிதான வழி, எலானின் நிறுவனத்துக்கான அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும்' என, அவர் குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக, எலான் மஸ்குடனான பிரிவு ஏமாற்றம் அளிப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், டிரம்ப் மீது எலான் மஸ்க் கடும் விமர்சனத்தை முன் வைக்க தொடங்கினார்.
''நான் இல்லாமல் டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார்'' என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆனால் ''நான் பென்சில்வேனியாவை வென்றிருப்பேன். நான் அதிக வித்தியாசத்தில் வென்றிருப்பேன்'' என்று டிரம்ப் பதில் கொடுத்துள்ளார்.
நண்பராக இருந்த எலான் மஸ்க், அதிபர் டிரம்ப் இடையே மோதல் உக்கிரம் அடைந்துள்ளது. இருவரும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (10)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06 ஜூன்,2025 - 13:46 Report Abuse

0
0
Reply
Sekar - ,இந்தியா
06 ஜூன்,2025 - 11:12 Report Abuse

0
0
Reply
Anand - chennai,இந்தியா
06 ஜூன்,2025 - 10:42 Report Abuse

0
0
Reply
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
06 ஜூன்,2025 - 10:41 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
06 ஜூன்,2025 - 10:21 Report Abuse

0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
06 ஜூன்,2025 - 09:35 Report Abuse

0
0
Reply
Padmasridharan - சென்னை,இந்தியா
06 ஜூன்,2025 - 08:48 Report Abuse

0
0
Reply
குஜன் - ,
06 ஜூன்,2025 - 08:47 Report Abuse

0
0
Reply
கூறமுதலி - ,
06 ஜூன்,2025 - 08:16 Report Abuse

0
0
Reply
SANKAR - ,
06 ஜூன்,2025 - 07:35 Report Abuse

0
0
Reply
மேலும்
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
Advertisement
Advertisement