வயல் வழியாக சவ ஊர்வலம்; காட்டுமன்னார்கோவில் அருகே அவலம்

சிதம்பரம்; காட்டுமன்னார்கோவில் அருகே, சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் இறந்த முதியவர் உடலை வயல் வழியாக கடந்து சென்று அடக்கம் செய்தனர்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த குருங்குடி, வடக்கு தெருவில் சுமார் 70 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகளாக சுடுகாட்டு பாதை இல்லை. இதன் காரணமாக, இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
வயல்வெளி வழியாக சடலங்களை கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதே பகுதியைச் சேர்ந்த முதியவர் அரசன் நேற்று முன்தினம் இறந்தார். இவரது உடலை நேற்று காலை கிராமத்தினர் 500 மீட்டர் துாரம், நெல் வயல் மற்றும் முட்புதர்களின் வழியாக உடலை சுமந்து சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் சுடுகாட்டு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்; அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்
-
கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி