என்.எல்.சி., தொ.மு.ச., தேர்தல்; 98.11 சதவீதம் ஓட்டுகள் பதிவு
நெய்வேலி; கடலுார் மாவட்டம், என்.எல்.சி.,யில் அங்கீகாரம் பெற்ற சங்கமாக திகழும் தொ.மு.ச., தொழிற்சங்கத்தில் 3,666 நிரந்தர தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்ட தொ.மு.ச., சங்க நிர்வாகிகள் தேர்தல் இனி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் என, தொ.மு.ச., பேரவை அறிவித்தது.
அதன்படி புதிய தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், அலுவலக செயலாளர், 16 துணைத் தலைவர்கள், 23 பகுதி செயலாளர்கள், 116 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 159 பதவிக்கான உட்கட்சி தேர்தல் நேற்று நடந்தது.
என்.எல்.சி., நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் மற்றும் அலுவலக பகுதிகள் உள்ளிட்ட 14 இடங்களில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. காலை 5:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5:30 மணிக்கு முடிந்தது.
மொத்தம் உள்ள 3,666 உறுப்பினர்களில் 3,597 பேர் ஓட்டளித்தனர். 98.11 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. தேர்தல் முடிந்து, நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 9ல் உள்ள என்.எல்.சி., பள்ளிக்கு ஓட்டு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
மேலும்
-
தமிழகத்தில் ஜூன் 12ல் திறக்கப்படும் புதிய சுங்கச்சாவடி: கட்டண விவரங்கள் வெளியீடு
-
5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்; அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்
-
கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்