விழுப்புரம்- - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ரத்து
விழுப்புரம்; கோடைக் காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக ராமேஸ்வரத்திற்கு, கடந்த மே 2ம் தேதி முதல் விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. வாரந்தோறும் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் ரயில் இயக்கப்பட்டது.
விழுப்புரத்திலிருந்து காலை 4:15 மணிக்குப் புறப்பட்டு, முற்பகல் 11:40 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும். இதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து பிற்பகல் 2:35 மணிக்குப் புறப்பட்டு இரவு 10:35 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில், ஜூன் 30-ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
பயணிகள் போதிய அளவில் பயணிக்கவில்லை என்கிற காரணத்தால், ராமேஸ்வரம் சிறப்பு ரயில், வரும் 13 ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
Advertisement
Advertisement