செஸ்: அரவிந்த் 'சாம்பியன்'

ஜெர்முக்: ஆர்மேனிய செஸ் தொடரில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் 25, சாம்பியன் ஆனார்.
ஆர்மேனியாவில் சர்வதேச கிளாசிக்கல் செஸ் தொடர் நடந்தது. இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட மொத்தம் 10 வீரர்கள் பங்கேற்றனர். இதன் 8 சுற்று முடிவில் பிரக்ஞானந்தா (5.5), அரவிந்த் (5.5), ஜெர்மனியின் டிமிட்ரிஜ் (4.5) 'டாப்-3' இடத்தில் இருந்தனர்.
நேற்று 9வது, கடைசி சுற்று போட்டி நடந்தது. பிரக்ஞானந்தா, ஆர்மேனியாவின் ராபர்ட்டை சந்தித்தார். பிரக்ஞானந்தா, 40வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மறுபக்கம் அரவிந்த், ஆர்மேனியாவின் ஹகோபியான் மோதினர். அரவிந்த், 52 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து அரவிந்த், பிரக்ஞானந்தா என இருவரும் 6.5 புள்ளி பெற்றனர். இருப்பினும் 'டை பிரேக்கர்' புள்ளி அடிப்படையில் முந்திய அரவிந்த் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார். இவருக்கு ரூ. 6.9 லட்சம் பரிசு கிடைத்தது. பிரக்ஞானந்தா 2வது (ரூ. 4.08 லட்சம்), டிமிட்ரிஜ் (5.0, ரூ. 3.32 லட்சம்) 3வது இடம் பெற்றனர்.

Advertisement