சதம் விளாசினார் ராகுல்: இந்தியா 'ஏ' அணி அபாரம்

நார்தாம்ப்டன்: இரண்டாவது டெஸ்டில் இந்தியா 'ஏ' அணியின் ராகுல் சதம் கடந்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் (4 நாள்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் விளையாடுகிறது. கேன்டர்பரியில் நடந்த முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் நார்தாம்ப்டனில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.
இந்தியா 'ஏ' அணிக்கு ஜெய்ஸ்வால் (17), கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (11) ஏமாற்றினர். இந்தியா 'ஏ' அணி 11.2 ஓவரில் 41/2 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின் இணைந்த ராகுல், கருண் நாயர் ஜோடி நம்பிக்கை தந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த போது வோக்ஸ் பந்தில் கருண் (40) அவுட்டானார். ஜார்ஜ் கில் வீசிய 40வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய ராகுல், பர்ஹான் அகமது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். பொறுப்பாக ஆடிய ராகுல், 151 பந்தில் சதத்தை எட்டினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த துருவ் ஜுரெல், 66 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்த போது ஜார்ஜ் ஹில் பந்தில் ஜுரெல் (52) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய ஹில் பந்தில் ராகுல் (116) 'பெவிலியன்' திரும்பினார். ஷர்துல் தாகூர் (19) ஏமாற்றினார்.
தேநீர் இடைவேளைக்கு பின் இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 311/6 ரன் எடுத்திருந்தது நிதிஷ் குமார் (33), தனுஷ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து லயன்ஸ் சார்பில் வோக்ஸ் 3 விக்கெட் சாய்த்தார்.
மேலும்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
-
சர்வதேச சந்தையில் வலிமை பெறலாம்; ரெப்போ ரேட் குறைப்புக்கு வரவேற்பு
-
ஆன்லைன் வாயிலாக ரூ. 73.27 லட்சம் மோசடி: திருச்சூரை சேர்ந்த வாலிபர் கைது
-
காங்கிரஸ் மூத்த தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை மரணம்
-
திருப்பூர் மாவட்டத்தில் 5 மாதத்தில் 40 குழந்தை திருமணங்கள்