போதிய பஸ் வசதி இல்லாமல் பொது மக்கள் அவதி: திமுக அரசு மீது இ.பி.எஸ்., சாடல்

சென்னை: கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாமல் மக்களை அவதிக்குள்ளாக்கும் தி.மு.க., அரசுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இ.பி.எஸ்., அறிக்கை:
நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு,கிளாம்பாக்கமே சாட்சி!
கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போதிய பஸ் வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு.
சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பஸ் வசதிகளை உறுதி செய்தார்களா என்றால், அதுவும் இல்லை!
இன்று வரை "கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" ஓய்ந்த பாடில்லை.
பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்கு தெரியாதா? அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்யக் கூட இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வக்கில்லையா?
சொந்த ஊருக்கு செல்லக் கூட மக்களை பரிதவிக்க வைக்கும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பஸ் சேவை முறையாகவும், சீராகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு இ.பி.எஸ்., அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும்
-
மறைமலை நகர் ரயில்வே கேட் நெடுநேரம் திறக்காததால் தவிப்பு
-
மதுராந்தகம் - மோச்சேரி சுரங்கப்பாதை பணி...கிடப்பில்:நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் மக்கள் தவிப்பு
-
சிங்கபெருமாள் கோவில் மேம்பாலத்தை திறக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
-
டேங்கர் லாரி மோதி இருவர் பலி
-
மதுராந்தகம் பகுதியில் நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரம்
-
கணவர் பலியான விபத்து மனைவியும் உயிரிழப்பு