டேங்கர் லாரி மோதி இருவர் பலி

கல்பாக்கம்:கல்பாக்கம் அடுத்த வாயலுார் கிராமத்தை சேர்ந்தவர் துரை, 57 கூலி வேலை செய்து வந்தார். நேற்று காலை 6:30 மணிக்கு சைக்கிளில் வாயலுார் செக்போஸ்ட் அருகே சாலையை கடக்க முயன்றபோது, புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு ஆசிட் ஏற்றி சென்ற டேங்கர் லாரி, துரை மற்றும் நடந்து சென்ற கண்ணன், 66 என்பவர் மீது மோதியது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மருத்துவமனைக்கு ஆம்புல்ன்ஸில் செல்லும் வழியில் துரை உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. சம்பவ இடத்திற்கு வந்த சதுரங்கப்பட்டினம் போலீசார், இறந்தவர்களின் உடல்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து லாரி டிரைவர் சுகுமாரன், 55 என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement