பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; முதல்முறையாக மகுடம் சூடிய கோகோ கப்!

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை தோற்கடித்து கோகோ கப் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்றது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவருமான அரினா சபலன்காவும், 2ம் நிலை வீராங்கனையும், அமெரிக்காவை சேர்ந்தவருமான கோகோ கப் பலப்பரீட்சை நடத்தினர்.
2 மணிநேரம் 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-7(5), 6-2, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கோகோ கப் முதல்முறையாக கைப்பற்றினார்.
கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலில், இதே சபலன்காவை தோற்கடித்து கோகோ கப் மகுடம் சூடியிருந்தார். இதன்மூலம், 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07 ஜூன்,2025 - 22:48 Report Abuse

0
0
Reply
மேலும்
-
உருண்டு புரண்டாலும் ஒட்டறது தான் ஒட்டும்!
-
பிரதமரின் பக்ரீத் வாழ்த்தை கேலி செய்த தமிழக அமைச்சர்
-
மாணவர் சேர்க்கையை மறுப்பது நியாயமல்ல தி.மு.க., அரசு மீது மார்க்சிஸ்ட் விமர்சனம்
-
'பிடிவாதம் காட்டாமல் முடிவெடுங்கள்': தே.மு.தி.க.,வுக்கு பா.ஜ., அறிவுரை
-
தேர்தல் தாமதம் வங்கதேச அரசுக்கு கடும் எதிர்ப்பு
-
மக்கள் செல்வாக்கு இழந்த தி.மு.க.,
Advertisement
Advertisement