தேர்தல் தாமதம் வங்கதேச அரசுக்கு கடும் எதிர்ப்பு
டாக்கா: நம் அண்டை நாடான வங்கதேசத்தில், பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. பார்லிமென்டுக்கு இந்தாண்டு ஏப்.,ல் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
தற்போது வங்கதேச ராணுவத்துக்கும், இடைக்கால அரசுக்கும் இடையே மறைமுக அதிகார போட்டி எழுந்துள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 15க்குள் தேர்தல் நடத்தப்படும் என, யூனுஸ் அறிவித்தார்.
இதற்கு முக்கிய எதிர்க்கட்சியான, முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின், வங்கதேச தேசியவாத கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வரும், டிச.,க்குள் தேர்தல் நடத்த அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement