9, 10ல் குறைகள் கேட்குது தேசிய மகளிர் ஆணையம்

சென்னை தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் டெலினா கோங்டுப் தலைமையில், 'மகிளா ஜன் சுன்வாய்' என்ற பெண்களுக்கான சிறப்பு பொது குறைகேட்பு முகாம், வரும் 9, 10ம் தேதிகளில், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

காலை 10:00 மணிக்கு துவங்கும் முகாமில், நிலுவையில் உள்ள புகார்கள் மற்றும் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் எடுத்துக்கொள்ளப்படும் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.

Advertisement