சென்றாய பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்

வாழப்பாடி, வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாய பெருமாள் கோவில் வைகாசி தேர் திருவிழாவை ஒட்டி, நேற்று முன்தினம் கணபதி ஹோமம், கலச பூஜை, புதிய தேருக்கு கண் திறப்பு, சிறப்பு பூஜை, சுவாமிக்கு திருக்கல்யாணம், அன்னதானம், சுவாமி ஊர்வலம் நடந்தது. நேற்று காலை ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து, தேரை இழுத்துச்சென்றனர்.


அப்போது இளைஞர்கள், மேள வாத்திய இசைக்கேற்ப நடனமாடினர். தொடர்ந்து வீடுகள்தோறும் சுவாமிக்கு தாம்பூலம், அவல், கடலை, வெல்லம் வைத்து படையலிட்டனர்.
நல்லதம்பி கவுண்டர் தெரு, வைத்திய படையாச்சி தெரு வழியே சென்ற தேர், மாலை, 6:30 மணிக்கு கோவிலை அடைந்தது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த, ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாளை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இன்று சத்தாபரணம் நடக்கிறது.

Advertisement