மீனவ விவசாயிகளுக்கு மானியம்

விருதுந: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மீன்வளத்துறை, கால்நடைத்துறை சார்பில் மீன் வளர்ப்பு தொழில் செய்யும் மீனவ விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக ஒரு எக்டேருக்கு அதிகபட்சம் 10 ஆயிரம் மீன்குஞ்சுகள் செய்ய ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த 10 எக்டேர் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மீன்வளம், மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பயன்பெற விரும்புவோர் 114,B 27/1, வேல்சாமி நகர், என்ற முகவரியில் இயங்கி வரும் விருதுநகர், மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், தொலைபேசி எண் 04562 244 707 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

Advertisement