சொந்த கட்டடத்துக்கு ரேஷன் கடை மாற்றப்படுமா?
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அருகே ஒண்டியூர் கிராமம் உள்ளது. அங்கு தனியார் இடத்தில் ரேஷன் கடை, வாடகைக்கு செயல்படுகிறது. அங்கு, 200க்கும் மேற்பட்ட கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. 2023 - 2024ல், சேலம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி, 10 லட்சம் ரூபாயில், ஒண்டியூரில் ரேஷன் கடை கட்டப்பட்டது. வீடியோ கான்பரஸ் மூலம் திறக்கப்பட்டு, 6 மாதங்களுக்கு மேலாகியும் இடமாற்றப்படவில்லை. தொடர்ந்து தனியார் வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது.
இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'புது கடைக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைக்கு செல்லும் வழி மறிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த கட்டடத்துக்கு ரேஷன் கடை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement