மின்பாதை கேபிள் பழுது நடுவழியில் நின்ற ரயில்
திருவண்ணாமலை,:மின்பாதை கேபிள் பழுதானதால், விழுப்புரம் - திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நடுவழியில் ஒரு மணி நேரம் நின்றது.
விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற மின்சார ரயில், திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே, நேற்று காலை, 7:45 மணிக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென தண்டவாளத்திற்கு மேல் செல்லும் மின் பாதையிலிருந்து, ரயிலுக்கு வர வேண்டிய மின்பாதை கேபிள் பழுதானது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ரயில் நடுவழியில் நின்றது. பயணியர் அவதிக்குள்ளாகினர்.
உடனடியாக ரயில் இன்ஜின் டிரைவர், காட்பாடி ரயில்வே நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். ரயில்வே பணியாளர்கள் விரைந்து சென்று, ரயிலுக்கு வரும், மின் பாதையை சீரமைத்தனர். இதில், ஒரு மணி நேர தாமதத்திற்கு பின், ரயில் அங்கிருந்து புறப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊராட்சிகளில் செயலர்கள், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை; சுகாதாரம், குடிநீர் வினியோகம் பாதிப்பால் சிரமம்
-
வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு
-
மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்; இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்பு
-
துார்ந்து போன கழிவுநீர் கால்வாயில் துர்நாற்றம்
-
இளையராஜாவின் இசை மழை நனைந்த ரசிகர்கள் உற்சாகம்
-
விவசாயத்தை அழிப்பது எந்த வகை பன்றிகள்; கூண்டு வைத்து பிடித்தாலும் பலனில்லாததால்
Advertisement
Advertisement