ஓடும் பஸ்சில் புகை
திருமங்கலம்: மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று காலை 10:30 மணிக்கு அரசு பஸ் கிளம்பியது. காலை 11:30 மணிக்கு ஆவலசுரன்பட்டி அருகே சென்ற போது டிரைவர் சீட் அருகில் புகை வந்தது. பயணிகள் கூச்சலிட, இறக்கி விடப்பட்டனர். பின்னர் டிரைவர், கண்டக்டர் தண்ணீர் ஊற்றி புகையை கட்டுப்படுத்தினர். பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement