ஓடும் பஸ்சில் புகை

திருமங்கலம்: மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று காலை 10:30 மணிக்கு அரசு பஸ் கிளம்பியது. காலை 11:30 மணிக்கு ஆவலசுரன்பட்டி அருகே சென்ற போது டிரைவர் சீட் அருகில் புகை வந்தது. பயணிகள் கூச்சலிட, இறக்கி விடப்பட்டனர். பின்னர் டிரைவர், கண்டக்டர் தண்ணீர் ஊற்றி புகையை கட்டுப்படுத்தினர். பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பப்பட்டனர்.

Advertisement