மஞ்சள் வைரஸ் நோயால் அவரை சாகுபடி பாதிப்பு; இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தேனி: மாவட்டத்தில் அவரை பயிரில் மஞ்சள் வைரஸ் நோய் பாதித்தும், பலத்த காற்றால் அவரை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 10 ஆயிரம் எக்டேருக்கு மேல் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் சாகுபடியாகும் காய்கறிகள் அண்டை மாவட்டங்கள், கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்பபடுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த தென்மேற்கு பருவமழை, அதிகபடியான காற்றால் அவரை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அவரை பயிரில் மஞ்சள் வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து தீவிரமாக வீசிய காற்றினால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. அவரை விலை கிலோ ரூ.90க்கு மேல் விற்பனை என்றாலும், மகசூல் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மாவட்டம் முழுவதும் வேளாண், தோட்டக்கலைத்துறையினர் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.காற்றில் உதிர்ந்த பூக்கள்அம்சராஜன், விவசாயி, கோம்பை.கோம்பை அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அதிக அளவில் அவரை சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
அவரையில் தற்போது மஞ்சள் வைரஸ் பரவியதால் செடிகள் மஞ்சள் கலரில் மாறி மகசூல் பாதிப்பை ஏற்படுகிறது.
வைரஸ் பரவை தடுக்க விவசாயிகள் நோய் பாதித்த செடிகளை அகற்றுகின்றனர். பாதிப்பு அதிகரிப்பாதால் சாகுபடியை அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நோய் பாதிப்பு இல்லாத பகுதிகளில் காற்றின் வேகத்தால் பூத்திருந்த பூக்களும் உதிர்ந்து மகசூல் பாதித்துள்ளது. இதனால் அவரை சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்மடைந்துள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோம்பை மலை அடிவாரப்பகுதிகளில் சில இடங்களில் மின்கம்பங்கள் சாயந்துள்ளன.
இதனால் விவசாய நிலங்களுக்கு மின்வசதி இன்றி உள்ளது. மின்சாரம் வழங்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
-
எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--
-
அறுவடைக்கு தயாரான நித்திய கல்யாணி
-
மூன்று வாகனங்கள் மோதி விபத்து : 7 பேர் காயம்
-
போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்குதல் வாலிபர் கைது