மஹாராஷ்டிரா மக்களை அவமதிக்கும் ராகுல்; முதல்வர் பட்னவிஸ் குற்றச்சாட்டு

மும்பை: மஹாராஷ்டிரா தேர்தல் முடிவுகளை ராகுல் குற்றம்சாட்டுவது, மக்கள் தீர்ப்பை அவமதிப்பது போன்றது என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் தேர்தலின் போது முறைகேடுகள் நடந்ததாக பா.ஜ., மீதும் தேர்தல் ஆணையம் மீதும் ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். அவரின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் முற்றிலும் மறுத்துவிட்டது.
இந் நிலையில், ராகுலின் குற்றச்சாட்டு, மக்கள் தீர்ப்பை அவமதிப்பது போன்றது என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
அவரின் பேச்சு காங்கிரசை மேலும் படுகுழியில் தள்ளும். ஜனநாயகம், தேர்தல் ஆணையம் குறித்து தொடர்ந்து சந்தேகங்கள் எழுப்புவதன் மூலம் அவர்(ராகுல்) நாட்டை எந்த திசையில் கொண்டு செல்கிறார்? எந்த விஷத்தை பரப்புகிறார் என்பது கவனமாக பார்க்க வேண்டும்.
மஹாராஷ்டிராவின் விவசாயிகள், சகோதரிகள், அனைத்து தரப்பு பொதுமக்களை நீங்கள் தொடர்ந்து அவமதித்தால் மக்கள் உங்களை ஒரு போதும் மன்னிக்கவே மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.





மேலும்
-
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
குடிபோதையில் தண்டவாளத்தில் கற்களை போட்டு அட்டகாசம்: 4 வாலிபர்கள் கைது
-
உணவு நஞ்சானதால் விபரீதம்:கேரளாவில் 50 பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்
-
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இந்தியா வளர்ச்சியின் அடித்தளம்; பிரதமர் மோடி
-
9 அடி குழியில் விழுந்த புலி மற்றும் நாய்: காயமின்றி பத்திரமாக மீட்ட வனத்துறை
-
லட்சக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள்... பாதுகாப்பில் பிரச்னை ஏற்படும்; முன்னரே எச்சரித்த பெங்களூரு போலீசார்