வைகாசி வசந்த உற்சவ விழா

அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி வசந்தத்தை வரவேற்கும் விழாவாக வைகாசி வசந்த உற்சவம் நேற்று கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ கருணாம்பிகை அம்மன், சோமாஸ்கந்தர், ஸ்ரீ விநாயகர் மற்றும் அஸ்திர தேவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பட்டி சுத்தி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Advertisement