செனாப் பாலத்தில் பயணம்; திருப்பூர் மக்களுக்கும் சாத்தியம்

திருப்பூர்: சில பாசஞ்சர் ரயில்கள் கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக பயணிப்பதால், கத்ரா சென்று, அங்கிருந்து செனாப் பாலம் செல்லும் வாய்ப்பு இம்மாவட்ட மக்களுக்க கிடைத்துள்ளது.


ஜம்மு காஷ்மீர், செனாப் நதியின் குறுக்கே, கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயர்ந்த பாலமான செனாப் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த பாலத்தின் வழியாக வந்தே பாரத் ரயில் இயக்கத்தையும் துவக்கி வைத்தார். வெள்ளிதோறும், கன்-னியாகுமரி - கத்ரா ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (எண்:16317) இயக்கப்-படுகிறது. வெள்ளியன்று புறப்படும் இந்த ரயில் திங்கள் காலை உதம்பூர் கடந்து, கத்ரா சென்று சேருகிறது. கத்ராவில் இருந்து ஸ்ரீ நகருக்கு வந்தே பாரத் ரயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது.கத்ரா ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, 72 கி.மீ., தொலைவில் செனாப் பாலம் உள்ளது. ரியாசி மாவட்டம், பக்கால் - கவுரி வழித்தடத்தில் பயணித்தால், செனாப் நதியின் குறுக்கே, கட்டப்-பட்டுள்ள செனாப் பாலத்தின் வழியே பயணிக்கவும் முடியும். ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் தவிர, செவ்வாய் தோறும் இயங்கும் திரு-நெல்வேலி - கத்ரா (எண்:16787) ஸ்ரீ மாதா வைஷ்ணா தேவி எக்ஸ்பிரஸ், ஞாயிறுதோறும் சென்னையில் இருந்து புறப்படும் அந்தமான் எக்ஸ்பிரஸ் (எண்:16031) ரயில்கள் மூலமும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ரா செல்ல முடியும். இந்த ரயில்கள், கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக பயணிப்பதால், கத்ரா சென்று, அங்கிருந்து செனாப் பாலம் செல்லும் வாய்ப்பு மாவட்ட மக்களுக்கு கிடைத்துள்ளது.

Advertisement