மதுபானம் கடத்திய வாலிபர் கைது 

திண்டிவனம்: புதுச்சேரியிலிருந்து மதுபானம் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் நேற்று மாலை 3:00 மணிக்கு, பெரும்பாக்கம் செக்போஸ்ட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் வந்த ஆலகிராமத்தை சேர்ந்த ராஜரத்தினம் , 24; புதுச்சேரியில் இருந்து 10 மதுபான பாட்டில்கள் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜரத்தினத்தை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement