செஞ்சி ஒன்றியத்தில் ரூ.103 கோடியில் வளர்ச்சி பணி
செஞ்சி: செஞ்சி ஒன்றியத்தில் 4 ஆண்டில் செய்துள்ள வளர்ச்சி பணிகள் குறித்து ஒன்றிய சேர்மன் விஜயகுமார் கூறியதாவது;
தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரின் வழிகாட்டுதலில், முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்.எல்.ஏ., வின் ஒத்துழைப்புடன் செஞ்சி ஒன்றியத்தில் 60 ஊராட்சிகளில், நான்காண்டில் 103 கோடியே 25 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன.
கனவு இல்ல திட்டத்தில் ரூ.24 கோடியே 78 லட்சம் மதிப்பில், 698 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ரூ.2.27 கோடி மதிப்பில் 286 வீடுகள் மறு சிரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ. 22.71 கோடி ரூபாய் மதிப்பில் 387 உள்கட்டமைப்பு பணியும், ரூ. 71.64 லட்சம் மதிப்பில் 38 நுாலகங்கள் சீரமைப்பும், குழந்தை நேய திட்டத்தில் ரூ.67 லட்சம் மதிப்பில் 3 பள்ளி கட்டிடங்களும், உள்கட்ட மைப்பு மேம்பாட்டு நிதியில் ரூ.3 கோடியே 94 லட்சம் மதிப்பில் 14 பள்ளிகட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.
எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.4.77 கோடி மதிப்பில், 61 உள்கட்டமைப்பு பணியும், ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் மூலம் ரூ.5.36 கோடி மதிப்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது.
ரூ.2.68 கோடி மதிப்பில் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 சாலைகள் மேம்பாடும், அடிப்படை கட்டமைப்பு மற்றும் ஒட்டு மொத்த துாய்மைக்கு புத்துயிர் திட்டத்தில் ரூ.132.67 லட்சம் மதிப்பீட்டில் 52 பள்ளிகளில் மறு சிரமைப்பும், நமக்கு நாமே திட்டத்தில் ரூ.11.60 லட்சம் மதிப்பில் 3 உள்கட்டமைப்பு பணியும், பொது நிதியில் ரூ.13.67 கோடி மதிப்பில் 428 கட்டமைப்பு பணிகளும், கனிமவள நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் உள்கட்டமைப்பு பணியும், பழங்குடியினருக்கு ரூ.48.12 லட்சம் மதிப்பீட்டில் 4 வீடும் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ஊராட்சியிலும் அடிப்படை வசதிகள் நிறைவு பெற்றுவிடும்.
இவ்வாறு ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தெரிவித்தார்.
மேலும்
-
காசாவுக்கு சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது
-
பாகிஸ்தான் கழுதைக்கு 'டிமாண்ட்' ரூ.2 லட்சமாக விலை உயர்வு
-
அதிகாலை பயணத்தால் தொடரும் விபரீதம்; நெடுஞ்சாலையில் கார்- வேன் மோதி 12 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்