கடலுார் மாவட்டத்தில் 101.9 டிகிரி வெயில் பதிவு
கடலுார், : கடலுார் மாவட்டத்தில் 101.9 டிகிரி பதிவானதால் மக்கள் அவதியடைந்தனர்.
கடலுார் மாவட்டத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி துவங்கி 28ம் தேதி முடிவடைந்தது. இந்த காலங்களில் அதிகளவு வெப்பம் வீசுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை துவங்கியதால் அக்னி நட்சத்திரத்தில் அதிகளவு வெயில் தாக்கம் இல்லை.
ஆனால் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னர் மீண்டும் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக அதிகளவு வெப்பம் உள்ளது. நேற்று பகல் நேரத்தில் வெப்ப அலை வீசியது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. வெயிலின் தாக்கத்தை தனிக்க குளிர்பானக் கடைகளில் குவிந்தனர். வெயில் அளவு 101.9 டிகிரி பதிவானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காசாவுக்கு சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது
-
பாகிஸ்தான் கழுதைக்கு 'டிமாண்ட்' ரூ.2 லட்சமாக விலை உயர்வு
-
அதிகாலை பயணத்தால் தொடரும் விபரீதம்; நெடுஞ்சாலையில் கார்- வேன் மோதி 12 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
Advertisement
Advertisement