கடலுார் மாவட்டத்தில்   101.9 டிகிரி வெயில் பதிவு

கடலுார், : கடலுார் மாவட்டத்தில் 101.9 டிகிரி பதிவானதால் மக்கள் அவதியடைந்தனர்.

கடலுார் மாவட்டத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி துவங்கி 28ம் தேதி முடிவடைந்தது. இந்த காலங்களில் அதிகளவு வெப்பம் வீசுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை துவங்கியதால் அக்னி நட்சத்திரத்தில் அதிகளவு வெயில் தாக்கம் இல்லை.

ஆனால் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னர் மீண்டும் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக அதிகளவு வெப்பம் உள்ளது. நேற்று பகல் நேரத்தில் வெப்ப அலை வீசியது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. வெயிலின் தாக்கத்தை தனிக்க குளிர்பானக் கடைகளில் குவிந்தனர். வெயில் அளவு 101.9 டிகிரி பதிவானது.

Advertisement