பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

கடலுார்,: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி நேற்று காலை பெரியநாயகி அம்மன் சமேத பாடலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை மகா மண்டபம் எதிரில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், நெய், தேன், மஞ்சள், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 23 வகையான மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நந்தி பகவானுக்கு பல வகை வண்ண மலர்கள், வில்வ மாலை மற்றும் அருகம்புல் மாலை சாற்றி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேப் போன்று, மஞ்சக்குப்பம் வில்வநாதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காசாவுக்கு சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது
-
பாகிஸ்தான் கழுதைக்கு 'டிமாண்ட்' ரூ.2 லட்சமாக விலை உயர்வு
-
அதிகாலை பயணத்தால் தொடரும் விபரீதம்; நெடுஞ்சாலையில் கார்- வேன் மோதி 12 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
Advertisement
Advertisement