மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு
சின்னசேலம் : சின்னசேலம் அருகே மாடு மேய்த்த மூதாட்டியின் தாலிச் செயின் மற்றும் தோடு ஆகியவற்றை பறித்துச் சென்ற பெண் உட்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த தீர்த்தாபுரம், கட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி பெரியம்மாள், 65; இவர், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் தீர்த்தாபுரம் அருகே உள்ள வயல்வெளியில் தனது ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் பெண் ஒருவருடன் வந்த மர்ம நபர் வழி கேட்பது போல் பெரியம்மாளிடம் பேச்சு கொடுத்து, திடீரென பெரியம்மாளை கீழே தள்ளி, அவரை தாக்கி 4 சவரன் தாலிச் செயின் மற்றும் அரை சவரன் தோடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம்!
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
Advertisement
Advertisement