ஓவர் குடி வாலிபர் பலி

விழுப்புரம் : கோட்டக்குப்பம் அருகே போதையில் மயங்கிய வாலிபர் இறந்தார்.

கோட்டக்குப்பம் அருகே ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் முகிலன்,35; அதிக குடிபழக்கம் உடையவர்.

குடிபழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 7 ம் தேதி பெரியகாலாப்பட்டு சாலையோரம் மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் மீட்டு பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியி முகிலன் உயிரிழந்தார்.

கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement