இலவச கண் சிகிச்சை முகாம்

செஞ்சி : செஞ்சி செம்மேட்டில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
செஞ்சி அடுத்த செம்மேட்டில் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பாரத் மித்ரன் அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொது மருத்துவ முகாம் நடந்தது.
அறக்கட்டளை நிறுவனர் முருகவேல் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜோலாதாஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறவாழி, ரமேஷ், அன்பழகன்
முன்னிலை வகித்தனர். முகாம் ஒருங்கிணைப்பாளர் ராகவன் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார்.
சத்தியமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் யோகப்பிரியா மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சையாளித்தனர்..
ரங்கபூபதி கல்லூரி தலைவர் ரங்கபூபதி, சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு, ஊராட்சி தலைவர் நீலாவதி, ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி, துணை தலைவர் ராஜேஸ்வரி, வழக்கறிஞர் சக்திவேல் கலந்து கொண்டனர். 105 பேர் கண் சிகிச்சையும், 90 பேர் பொது மருத்துவ சிகிச்சையும் பெற்றனர்.
மேலும்
-
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம்!
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது