மரக்கன்றுகள் நடும் விழா

புதுச்சேரி : உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் ராஜவேலு தலைமை தாங்கினார். உடற்கல்வி விரிவுரையாளர் பழனி வரவேற்றார். தலைமையாசிரியை சாந்தி முன்னிலை வகித்தார்.
பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் தீப்பாய்ந்தான், ராஜா ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்தும், மரங்களின் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறப்பு விருந்தினராக காவேரி கூக்குரல் இயக்கத்தின் அலுவலர் அசோக் பங்கேற்று 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' எனும் தலைப்பில் பேசினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஜானகிராமன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம்!
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
Advertisement
Advertisement