கொலை கைதி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

புதுக்கோட்டை: சிறையில் உள்ள கொலைக்கைதியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை, காந்தி நகரில், போஸ் நகரை சேர்ந்த தினேஷ்குமார், 23, என்ற இளைஞர், ஒன்பது பேர் கொண்ட கும்பலால் முன்விரோதம் காரணமாக ஜூன் 3ல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் கைதாகி, சிறையில் இருக்கும் காந்தி நகரைச் சேர்ந்த சுமன், 30, என்பவரது வீட்டு சுவரில், கொலை செய்யப்பட்ட தினேஷ்குமாரின் நண்பர்கள் போஸ் நகரை சேர்ந்த பூபதி, 31, நரிமேட்டை சேர்ந்த சதீஷ், 30, அடப்பன்வயலை சேர்ந்த காதர்ஷா, 28, அய்யனார்புரத்தை சேர்ந்த பழனிகுமார், 29, ஆகிய நான்கு பேரும், பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினர்.

சுமனின் தாய் மற்றும் மனைவி வீட்டில் இருந்த நிலையில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. புகாரில், புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார், மூன்று பேரை கைது செய்து, தப்பியோடிய பழனிகுமாரை தேடி வருகின்றனர்.

Advertisement