கோவில் திருப்பணிக்கு அமைச்சர் நிதி வழங்கல்

வில்லியனுார் : கூடப்பாக்கம் தர்மராஜா உடனுறை திரவுபதி அம்மன் கோவில் திருப்பணிக்கு அமைச்சர் சாய்சரவணன்குமார் தனது சொந்த பணம் ரூ. 3- லட்சம் வழங்கினார்.

கூடப்பாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள தர்மராஜா உடனுறை திரவுபதி அம்மன் கோவில் திருப்பணி நடந்து வருகிறது.

கோவில் திருப்பணிக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் தனது சொந்த பணம் ரூ. 3 -லட்சத்தை கோவில் நிர்வாக அதிகாரி நித்தியலட்சுமியிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர் ஹரிநமோநாராயணன், அய்யனார், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement