13 கிலோ கஞ்சா கடத்தல் 4 பேருக்கு 7 ஆண்டு சிறை

கடலுார் : கஞ்சா கடத்திய வழக்கில் 4 வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
கடலுார் மாவட்டம், வேப்பூர் போலீசார் கடந்தாண்டு மே 30ம் தேதி அதே பகுதியில் அரசு பஸ்சை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். இதில், 13 கிலோ கஞ்சா கடத்தி வந்த தொழுதுார் கருணாநிதி மகன் சக்திவேல், ராமநத்தம் பாண்டியன் மகன் கார்த்திக், 24; புளியகரம்பலுார் பொன்முடி மகன் மணிவண்ணன,23; பாண்டியன் மகன் லோகநாதன்,22; ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மீது தஞ்சாவூர் சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றிய முதல்வர்: அண்ணாமலை தாக்கு
-
11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!
-
டிரம்ப் பற்றி விமர்சனம்: வருத்தம் தெரிவித்தார் எலான் மஸ்க்!
-
ஜம்மு காஷ்மீர் சட்டசபை வளாகத்தில் திடீர் தீ; விரைந்த தீயணைப்பு வீரர்கள்
-
கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் திட்டவட்டம்
-
பொறுத்துக் கொள்ள முடியாது; நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் அதிகாரிகள் மீது ஐகோர்ட் அதிருப்தி
Advertisement
Advertisement