கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் திட்டவட்டம்

22


சென்னை: ''2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மார்க்சிஸ்ட் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது முக்கியமானது'' என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம் தெரிவித்தார்.


சென்னையில் இன்று (ஜூன் 11) நிருபர்கள் சந்திப்பில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம் கூறியதாவது: நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளை வைத்து கொண்டு ஓட்டு சதவீதம் இப்படி தான் இருக்கிறது என்று சொல்லக் கூடாது. பா.ஜ., அ.தி.மு.க., ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை ஏற்படுத்தி கொண்டு, அந்த கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் அந்த கட்சி தலைவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ஆகவே அந்த கூட்டணியை தோற்கடிப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியை தோற்கடிக்கும் வலிமை இப்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் தி.மு.க., தலைமையிலான அணிக்கு தான் இருக்கிறது. ஆகவே தி.மு.க., தலைமையிலான கூட்டணி சார்பில் தான் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.



பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் தீர்மானம். அதற்கு ஏற்ப எங்கள் அரசியல் அணுகுமுறை இருக்கும். அதே நேரத்தில், 2026ம் ஆண்டு தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சி கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும். கூடுதலான எண்ணிக்கையில் சட்டசபைக்கு கட்சி உறுப்பினர்கள் செல்ல வேண்டும்.


அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று நாங்கள் எடுத்து இருக்கும் தீர்மானம் எவ்வளவு முக்கியமோ? அதே அளவுக்கு, மார்க்சிஸ்ட் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement