கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் திட்டவட்டம்

சென்னை: ''2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மார்க்சிஸ்ட் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது முக்கியமானது'' என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம் தெரிவித்தார்.
சென்னையில் இன்று (ஜூன் 11) நிருபர்கள் சந்திப்பில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம் கூறியதாவது: நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளை வைத்து கொண்டு ஓட்டு சதவீதம் இப்படி தான் இருக்கிறது என்று சொல்லக் கூடாது. பா.ஜ., அ.தி.மு.க., ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை ஏற்படுத்தி கொண்டு, அந்த கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் அந்த கட்சி தலைவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
ஆகவே அந்த கூட்டணியை தோற்கடிப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியை தோற்கடிக்கும் வலிமை இப்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் தி.மு.க., தலைமையிலான அணிக்கு தான் இருக்கிறது. ஆகவே தி.மு.க., தலைமையிலான கூட்டணி சார்பில் தான் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் தீர்மானம். அதற்கு ஏற்ப எங்கள் அரசியல் அணுகுமுறை இருக்கும். அதே நேரத்தில், 2026ம் ஆண்டு தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சி கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும். கூடுதலான எண்ணிக்கையில் சட்டசபைக்கு கட்சி உறுப்பினர்கள் செல்ல வேண்டும்.
அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று நாங்கள் எடுத்து இருக்கும் தீர்மானம் எவ்வளவு முக்கியமோ? அதே அளவுக்கு, மார்க்சிஸ்ட் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (21)
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
11 ஜூன்,2025 - 21:16 Report Abuse

0
0
Reply
Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா
11 ஜூன்,2025 - 19:57 Report Abuse

0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
11 ஜூன்,2025 - 18:48 Report Abuse

0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
11 ஜூன்,2025 - 17:35 Report Abuse

0
0
Reply
Suppan - Mumbai,இந்தியா
11 ஜூன்,2025 - 16:14 Report Abuse

0
0
Reply
Thravisham - Bangalorw,இந்தியா
11 ஜூன்,2025 - 15:21 Report Abuse

0
0
Reply
சிவம் - ,
11 ஜூன்,2025 - 15:14 Report Abuse

0
0
Reply
Anbuselvan - Bahrain,இந்தியா
11 ஜூன்,2025 - 14:18 Report Abuse

0
0
Reply
Sundar R - ,இந்தியா
11 ஜூன்,2025 - 13:57 Report Abuse

0
0
Reply
vadivelu - thenkaasi,இந்தியா
11 ஜூன்,2025 - 13:56 Report Abuse

0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
-
கவுன்டி அணியில் திலக் வர்மா
-
விம்பிள்டன் டென்னிஸ்: பரிசு எவ்வளவு
-
ராதா யாதவ் தேர்வு: இந்திய அணியில் மாற்றம்
-
அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்: சி.பி.ஐ., விசாரணைக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
-
சத்தீஸ்கரில் ரூ.19 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 3 நக்சல்கள் சரண்
-
பயணியிடம் ரூ.5 லட்சம் திருட்டு: டில்லியில் டிரைவர் உட்பட இருவர் கைது
Advertisement
Advertisement