நவரை நெல் வயல்களில் கருப்பு வண்டுகள் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே நவரை நெல் வயல்களில் பூச்சி தாக்குதல் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேடு, தலைக்குளம், வடதலைக்குளம், அம்பாள்புரம், கொளக்குடி பிரசன்னராமபுரம், பின்னலுார் ஆகிய பகுதிகளில் சம்பா நெல் அறுவடைக்கு பின்பு மார்ச் மாதத்தில் நவரை நெல் நடவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நெற்பயிர்களில் கருப்பு வண்டு நாவாய் பூச்சிகள் தாக்கியுள்ளன. இதனால் பயிர்கள் வளர்ச்சி குறைந்து சேதமடைந்துள்ளது. பாதிப்பிற்குள்ளான நெல்வயல்களை விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் நடராஜன், இணை பேராசிரியர் பாரதிகுமார், வேளாண் துணை அலுவலர் சரவணன், வட்டார வேளாண் உதவி இயக்குனர் முகமது நிஜாம், உதவி வேளாண் அலுவலர் சிங்காரமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
வயல்களில் கருப்பு வண்டுகள் தாக்குதலை கட்டுப்படுத்த ஆரம்ப காலத்தில் வயல்களில் விளக்குப் பொறிகள் பயன்படுத்த வேண்டும் என, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
மேலும்
-
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம்!
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது