வீட்டுக்கு மட்டுமல்ல விலை; பொது இடத்துக்கும் 40% வசூல் பெருநகர குடியிருப்புகளின் இன்றைய நிலை

புதுடில்லி : பெருநகர அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர், தாங்கள் செலுத்தும் மொத்த தொகையில் 60 சதவீதம் வரை மட்டுமே வசிப்பிடமாக பெறும் நிலை அதிகரித்து வருகிறது.
சென்னை உட்பட நாட்டின் பெருநகரங்களில் வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகி வருகின்றன. வேலைக்கு செல்வோரும், தொழில் புரிவோரும் அதிகரித்துள்ளதால், நகரங்களில் இத்தகைய குடியிருப்புகளில் வீடுகள் தேவை உயர்ந்து வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்கும்போது, அதற்கு செலுத்தும் தொகையில் 60 சதவீதம் மட்டுமே வீட்டுக்குள் வசிப்பிடமாக கிடைக்கிறது; மீதி 40 சதவீதம் வரை பொது பயன்பாட்டு வசதிகளுக்கான விலையாக அமைவதாக, கட்டுமான ஆய்வு நிறுவனம் அனராக் தெரிவிக்கிறது.
சென்னை, பெங்களூரு, டில்லி, மும்பை, புனே, ஹைதராபாத், கொல்கட்டா ஆகிய ஏழு பெருநகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், வீடு வாங்குவோர் செலுத்தும் தொகையில் 40 சதவீதம், அவர் நேரடியாக பயன்படுத்தக் கூடியதாக அல்லாத பகுதிகளுக்கும் சேர்த்து செலுத்த வேண்டியிருப்பது தெரிய வந்தது.
இதில், மும்பை 49 சதவீதத்துடன் முதலிடத்திலும், சென்னை 36 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளன.
கிராப் 1
7 நகரங்களில் நிலை
டில்லி மும்பை பெங்களூரு புனே ஹைதராபாத் சென்னை கொல்கட்டா
டேபிள் 1
நகரம் 2019 2022 2025 ஜன., - மார்ச்
டில்லி 31 37 41
மும்பை 33 39 49
பெங்களூரு 30 35 41
புனே 32 36 40
ஹைதராபாத் 30 33 38
சென்னை 30 32 36
கொல்கட்டா 30 35 39
சராசரி 31 35 40
வாங்கும் சொத்தின் மொத்த ஏரியாவான சூப்பர் பில்ட்அப் ஏரியாவில் வாழ்வதற்கு நேரடி பயன்பாடற்ற பொது இடங்களையும் சேர்த்து விலை நிர்ணயிப்பது லோடிங் பேக்டர் எனப்படுகிறது. அதாவது, கார்ப்பெட் ஏரியா என்ற அளவில் தான் வாடிக்கையாளர் தன் வீட்டை நேரடியாக பயன்படுத்துவார். லோடிங் சதவீதம் என்பது, சூப்பர் பில்ட்அப் ஏரியா - கார்ப்பெட் ஏரியாவை 1,000த்தால் வகுத்து, 100 ஆல் பெருக்கினால் கிடைப்பது.உதாரணமாக, 1,300 சதுர அடி சூப்பர் பில்ட்அப் வீடு வாங்கினால், கார்ப்பெட் ஏரியா 1,000 சதுர அடியை கழித்து கிடைப்பது 300 சதுர அடி. அதை 1,000த்தால் வகுத்து, 100 ஆல் பெருக்கினால் 30 சதவீதம் வரும். இதுதான் லோடிங் பேக்டர்.
காரிடார், லாபி, லிப்ட், கம்யூனிட்டி ஹால், நீச்சல் குளம், விளையாட்டு பூங்கா, வழிபாட்டு இடம், யோகா மையம், உடற்பயிற்சி கூடம், மாடிப்படிகள், வாகன நிறுத்துமிடம், பாதுகாவலர் அறை, பசுமைப் பகுதிகள், உட்புற வழித்தடங்கள் என வீட்டை தவிர்த்து, பொது பயன்பாட்டு இடங்களுக்கும் சேர்த்து பணம் பெறப்படுகிறது.
மேலும்
-
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம்!
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது