பழைய ஓய்வூதிய திட்ட ஊழியர் விவரங்களை 6 மாதங்களுக்கு முன் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
விருதுநகர் : தமிழக அரசில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்குரியவர்கள் ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே அவர்களின் விவரங்களை அந்தந்த துறைகள் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு துறைகளில் பழைய ஓய்வூதிய திட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஓய்வு பெறுவதற்கு முந்தைய மாதம் துறை அதிகாரிகளிடம் ஓப்புதல் பெற்று ஆவணங்கள் தயாரிக்கும் பணிகள் நடப்பது வழக்கம். ஆனால் மே 31ல் மட்டும் 8144 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.
வரும் காலங்களிலும் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் பணப்பலன்கள், ஓய்வூதியம் உடனடியாக வழங்க எதுவாக நடை முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதித்திட்டத்தில் இருப்பவர்களின் பெயர்கள், ஓய்வு பெறும் நாள் அனைத்து விவரங்களையும் அவர்கள் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே துறை வாரியாக சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு மாதத்திற்கு முன்பு துவங்க வேண்டிய ஓய்வு பெறுபவர்களுக்கான பணிகளை ஆறு மாதங்களுக்கு முன்பே துவங்க அரசின் துறைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 31ல் அதிக எண்ணிக்கையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றதால் தற்போது இந்த புதிய நடைமுறை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்
-
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம்!
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது