ஓசியில் சிகரெட் கேட்டு கடையை சூறையாடிய 2 பேர் கைது
புதுச்சேரி: ஓசியில் சிகரெட் தாராத வாலிபரை தாக்கி கடையை சூறையாடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 24; இவர் காமராஜர் சாலை வி.வி.பி., நகரில் உள்ள பெட்டி கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்த கடைக்கு நேற்று முன்தினம் வந்த,தட்டாஞ்சாவடியை சேர்ந்த பீட்டர் (எ) வெங்கடேசன், 25; இசக்கிமுத்து, 25; இருவரும் கடைக்கு வந்து பாலாஜியிடம் சிகரெட் கேட்டுள்ளனர்.அப்போது பாலாஜி பணம் கொடுத்தால் தருகிறேன் என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் கடைக்குள் அத்து மீறிநுழைந்து கடையை சூறையாடினர். அப்போது அவர்களை தடுக்க வந்த பாலாஜியை இசக்கி டீ கிளாசால் தாக்கினார்.
பலத்த காயமடைந்த பாலாஜியை அக்கம், பக்கத்தினர் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
மேலும்
-
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம்!
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது