பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு பொதுமக்கள் கடும் அவதி

பெண்ணாடம்: பெண்ணாடம் பழைய பஸ் நிலைய பயணியர் நிழற்குடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெண்ணாடம் பேரூராட்சி முக்கிய பகுதியாக உள்ளது. இப்பகுதியில் அரசு, தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், சிமென்ட் மற்றும் சர்க்கரை ஆலை இயங்கி வருகின்றன. சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவர்கள், விவசாயிகள் அன்றாட தேவைக்கும், விருத்தாசலம், திட்டக்குடி, கடலுார், திருச்சி, சென்னை உட்பட பல பகுதிகளுக்கு செல்லவும் பெண்ணாடம் பஸ் நிலையம் தான் வரவேண்டும்.
இதனால் பஸ் நிலைய வளாகம் எந்நேரமும் பயணிகள் கூட்டம் மிகுந்து காணப்படும். பயணிகள் நலன்கருதி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் இருக்கை வசதியுடன் கூடிய பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
நாளடைவில், பயணியர் நிழற்குடையில் இருந்த இருக்கைகளை, சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தியதுடன், பெயர்த்தும் எடுத்து சென்றனர். தற்போது, தள்ளுவண்டி, பூ, பழக்கடைகள் நிழற்குடையை ஆக்கிரமித்து பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு விற்கப்படுகின்றன.
நிழற்குடை இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. இதனால், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் அமரமுடியமால் நின்றபடி நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். எனவே, பயணிகள் நலன் கருதி, ஆக்கிரமிப்புகளை அகற்ற பெண்ணாடம் போலீசார், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்; ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு!
-
விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்மநபர்கள்; சென்னையில் 3வது முறை சம்பவம்!
-
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம்!
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!