பள்ளி சாலை சேதம் குழந்தைகள் சிரமம்

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில், இரு வகுப்பறை கட்டடங்கள் எதிரெதிரே உள்ளன. அதற்கு நடுவே உள்ள, சிமென்ட் சாலையை, மக்களும் பயன்படுத்துகின்றனர். ஆனால் சாலை மேற்புறம் இருந்த கலவை பெயர்ந்து, மேடு, பள்ளமாக சீரழிந்துள்ளது.


வெளியே தெரியும் ஜல்லி கற்கள், பள்ளி குழந்தைகளின் கால்களில் குத்தி வலியை ஏற்படுத்துகின்றன. மாணவ, மாணவியர் விளையாட மைதானமும் கிடையாது. சிமென்ட் சாலையில் தான் விளையாடுகின்றனர்.
மேலும் மழை காலங்களில் சாலை பள்ளத்தில் தேங்கும் தண்ணீரில் குழந்தைகள் வழுக்கி விழுகின்றனர். இதனால் இரு வகுப்பறைக்கு இடையே பேவர் பிளாக் சாலை அமைக்க, பெற்றோர் வலியுறுத்தினர்.

Advertisement