பள்ளி சாலை சேதம் குழந்தைகள் சிரமம்
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில், இரு வகுப்பறை கட்டடங்கள் எதிரெதிரே உள்ளன. அதற்கு நடுவே உள்ள, சிமென்ட் சாலையை, மக்களும் பயன்படுத்துகின்றனர். ஆனால் சாலை மேற்புறம் இருந்த கலவை பெயர்ந்து, மேடு, பள்ளமாக சீரழிந்துள்ளது.
வெளியே தெரியும் ஜல்லி கற்கள், பள்ளி குழந்தைகளின் கால்களில் குத்தி வலியை ஏற்படுத்துகின்றன. மாணவ, மாணவியர் விளையாட மைதானமும் கிடையாது. சிமென்ட் சாலையில் தான் விளையாடுகின்றனர்.
மேலும் மழை காலங்களில் சாலை பள்ளத்தில் தேங்கும் தண்ணீரில் குழந்தைகள் வழுக்கி விழுகின்றனர். இதனால் இரு வகுப்பறைக்கு இடையே பேவர் பிளாக் சாலை அமைக்க, பெற்றோர் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தென்காசியில் சோகம்! ஆதரவற்றோர் இல்லத்தில் 3 பேர் பலி; 8 பேர் மருத்துவமனையில் அனுமதி
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
-
சமூகம், இசை, ஆன்மிக பணிகளில் சிறந்து விளங்கியோர்க்கு விருதுகள்
-
மே.வங்கத்தில் வன்முறை; இருதரப்பினர் மோதல், கல்வீச்சு; 40 பேர் கைது!
-
என்னை நடைபிணமாக்கி விட்டு நடைபயணம் செல்கிறார்கள்; எல்லாமே நாடகம்...ராமதாஸ் உச்சகட்ட விரக்தி
-
கஜேந்திர யானைக்கு மோட்சம் அளிக்கும் விழா
Advertisement
Advertisement