மாத்திரை சாப்பிட்ட தொழிலாளி பலி
தாரமங்கலம், தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி, அண்ணா நகரை சேர்ந்தவர் சேகர், 38. தறித்தொழில் செய்து வந்தார். இவருக்கு, 3 ஆண்டாக உடல்நிலை சரியில்லாததால், சேலத்தில் சித்த வைத்தியம் பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடன் பிரச்னையும் இருந்தது. நேற்று முன்தினம் மாலை, தென்னை மரத்துக்கு வைத்திருந்த அமோனியம் பாஸ்பேட் மாத்திரையை விழுங்கினார். உறவினர்கள், அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்கு ஓமலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் இறந்தது தெரியவந்தது. அவரது மனைவி மனோரஞ்சிதம் புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாழ்நாள் முழுதும் தடை!
-
மச ஒரம்பு ஓடை புனரமைப்பு நிறைவு.. 10 கோடி லிட்டர் நீர் சேகரிக்க முடியும் : விவசாயிகள் மகிழ்ச்சி!
-
துாத்துக்குடி வந்துள்ள பிங்க் பிளமிங்கோ
-
கூட்டணியை நானே முடிவு செய்வேன்: ராமதாஸ் திட்டவட்டம்
-
தென்காசியில் சோகம்! ஆதரவற்றோர் இல்லத்தில் 3 பேர் பலி; 8 பேர் மருத்துவமனையில் அனுமதி
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
Advertisement
Advertisement