முன்கூட்டியே வழக்கு போட்டிருந்தால் தமிழகத்துக்கு நிதி வந்திருக்கும்: பா.ம.க.,
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், 2024 - 25ம் கல்வியாண்டுக்கான முதல் காலாண்டில், அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, 3 மாதங்களில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 573 கோடி ரூபாயை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை மத்திய அரசு வழங்கவில்லை.
இது தொடர்பான, வழக்கு விசாரணையின்போது, 'எவ்வளவு காலமாக, மத்திய அரசின் நிதி வரவில்லை; எப்போது வழக்கு தொடர்ந்தீர்கள்' என்று, உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை கால நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தமிழக அரசின் வழக்கறிஞர், 'கடந்த ஆண்டு முதல் நிதி வரவில்லை; கடந்த மே 20-ம் தேதிதான் வழக்கு தொடர்ந்தோம்' என்றார்.
அதன் அடிப்படையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. பா.ம.க., வலியுறுத்தியவாறு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே வழக்கு தொடர்ந்திருந்தால், அடுத்த சில மாதங்களில், இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு, அதில் தீர்ப்பு வந்திருக்கும்; தமிழகத்திற்கான நிதி கிடைத்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
விமான விபத்து: ஆமதாபாத் விரைகிறது தேசிய பேரிடர் படை
-
நாளை 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
-
6 மாதங்களில் 25வது முறையாக வெடித்தது ஹவாய்த்தீவு எரிமலை; ஆய்வாளர்கள் சொல்வது இதுதான்!
-
குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது; பயணிகள் 242 பேர் கதி என்ன?
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையா? விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
'தமிழ் வாழ்க' என்று எழுதுவதை தவிர, தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள்; தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி