இஸ்ரேலுக்கு கடுமையான தண்டனை: ஈரான் தலைவர், அதிபர் எச்சரிக்கை

டெஹ்ரான்: ஈரானை தாக்கிய குற்றத்திற்காக கடுமையான தண்டனையை இஸ்ரேல் எதிர்பார்க்க வேண்டும் என ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா கமெனி தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அதிபரும் கூறியுள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் மீதும், ஷிராஜ் மற்றும் தப்ரிஜ் நகரங்கள் மீதும் இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியது. இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்த தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹூசைன் சலாமி, ஈரான் ஆயுதப்படை தலைவரான ஜெனரல் முகமது பகேரி ஆகியோர் உயிரிழந்தவர்களில் முக்கியமானவர்கள். இதனை ஈரானிய ஊடகங்கள் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏவுகணை திட்ட தலைவராக செயல்பட்ட அலி ஹஜிஜதேஹாவை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரானும் 100 டுரோன்களை ஏவி பதிலடிகொடுத்துள்ளது.
இந்நிலையில், ஈரானின் உயரிய தலைவரான அயதுல்லா கமெனி கூறியதாவது: ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் பெரிய குற்றம் செய்துள்ளது. இதற்காக அந்நாடு கடுமையான தண்டனையை எதிர்பார்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறுகையில், தாக்குதலுக்கு பயந்து அமைதியாக இருக்க மாட்டோம். தனது முட்டாள்தனமான செயலுக்கு வருத்தப்படும் வகையில் இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.





மேலும்
-
பா.ஜ., கூட்டணி ஆட்சியில் இ.பி.எஸ்., தான் முதல்வர்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்!
-
மணிப்பூரில் ஆயுத குவியல் சிக்கியது; 100 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள்
-
பிரதமர் மோடி 4 நாள் பயணம்; கனடாவில் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!
-
இந்தியாவில் 7,400 பேருக்கு கொரோனா; தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 9 பேர் பலி
-
ஆமதாபாத்தில் நடந்த விபத்துக்கு முன் விமானி கூறியது என்ன?
-
ஈரானின் புதிய ராணுவ தளபதியாக அமீர் ஹடாமி அறிவிப்பு!