பா.ஜ., கூட்டணி ஆட்சியில் இ.பி.எஸ்., தான் முதல்வர்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்!

திருவாரூர்: ''தமிழகத்தில் எங்களுக்கு கூட்டணி கட்சிகளுடைய ஆட்சி. தமிழக முதல்வர் இ.பி.எஸ்., தான்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவாரூரில் நிருபர்கள் சந்திப்பில், நயினார் நாகேந்திரன் கூறியதாவது: எங்களுக்கு கூட்டணி கட்சிகளுடைய ஆட்சி. தமிழக முதல்வர் இ.பி.எஸ்., தான். நான் ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகளை வைத்து இருந்தேன். எல்லா அணியும் (கட்சி) ஒன்றாக சேர வேண்டும்.
@quote@எல்லா கட்சிகளும் ஒரணியில் திரள வேண்டும் என்று சொல்லி இருந்தேன். இதில் யாருக்கு லாபம், நஷ்டம் என்பது தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும். நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன்.quote
தே.மு.தி.க.,வும் எங்களுடன் கூட்டணிக்கு வர வேண்டும். அப்போது தான் தி.மு.க.,வை வெற்றி பெற முடியும். அதாவது நீங்கள் பார்க்கும் பார்வை வித்தியாசமாக இருக்கும். நான் பார்க்கும் பார்வை வித்தியாசமாக இருக்கும்.
அமித்ஷா எங்களுடைய கூட்டணி கட்சிகளின் ஆட்சி, இ.பி.எஸ்., தலைமையில் அமையும் என்று சொல்லி இருக்கிறார். எங்களுடைய கோரிக்கை. எல்லோரும் ஒன்று சேர வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.














மேலும்
-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தை தவிர்த்தது இந்தியா
-
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்
-
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு சாத்தியமற்ற நிபந்தனைகள்: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
-
அரிவாளை காட்டி போலீசை மிரட்டிய திருடன் தப்பி ஓட்டம்
-
மக்களை ஏமாற்றியது இனிமேலும் நடக்காது
-
ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் யானை நினைவு மண்டப பணி விறுவிறு