ஈரானின் புதிய ராணுவ தளபதியாக அமீர் ஹடாமி அறிவிப்பு!

டெஹ்ரான்: ஈரானின் புதிய ராணுவ தளபதியாக அந்நாட்டின் அமீர் ஹடாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு ஆசியாவில் ஈரானும், இஸ்ரேலும் பல ஆண்டுகளாக பரஸ்பரம் வைரியாக சித்தரித்துக் கொள்கின்றன. இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்தாண்டு தாக்குதல் நடத்த, அதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரோல் போர் தொடங்கியது.
இதில் பெரும் சேதம் ஏற்பட, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாக்களுக்கு ஆதரவாக ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. நேரடி தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட ராணுவ அதிகாரி, ஆயுதப்படை தலைமை தளபதி முகமது பகேரி, காவல்படை தலைவர் ஹூசைன் சலாமி ஆகியோர் கொல்லப்பட்டு விட்டதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் அறிவித்தன.
வெள்ளி இரவு முதல் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான், இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலை உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன. இத்தருணத்தில், சண்டையை நிறுத்துமாறு ஐ.நா, கேட்டுக் கொண்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உயர்மட்ட ராணுவ தலைவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், தளபதி கமேனி, ரராணுவத்தை மறுசீரமைக்க திட்டமிட்டு உள்ளார். அதன் முக்கியகட்டமாக, ஈரானின் புதிய ராணுவ தளபதியாக அந்நாட்டின் அமீர் ஹடாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை அந்நாட்டு அரசு ஊடகமான ஐ.ஆர்.என்.ஏ. வெளியிட்டுள்ளது. அமீர் ஹடாமி, 2013ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை ஈரான் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியவர். அர்ப்பணிப்பு., திறமை மற்றும் அனுபவத்திற்காக கமேனியால் பெரிதும் பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.