மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

குறிஞ்சிப்பாடி :குறிஞ்சிப்பாடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

குறிஞ்சிப்பாடி அடுத்த மேலப்புதுப்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிராமணமூர்த்தி, 43; இவர், குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே., நகரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இங்கு, நேற்று காலை வீட்டின் கதவை திறந்து மின்விளக்கு ஆன் செய்ய சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது, அதிலிருந்து மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement