பைக்கில் மான் தோல் கடத்திய சாமியார் உட்பட இருவர் கைது

சூணாம்பேடு:இருசக்கர வாகனத்தில் மான் தோல் கடத்திய சாமியார் உட்பட இருவரை, போலீசார் கைது செய்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சூணாம்பேடு காவல் எல்லைக்கு உட்பட்ட கொளத்துார் சோதனைச்சாவடியில், நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற 'கே.டி.எம்.,' பைக்கை மடக்கி சோதனையிட்டனர்.
அதில், பதப்படுத்தப்பட்ட மான் தோல் கடத்தி வந்தது தெரிந்தது.
மேலும் அவர்கள் விழுப்புரம் மாவட்டம், ஆதனம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி, 33, சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த சபரி, 22, என தெரிந்தது.
முதற்கட்ட விசாரணையில், ஆசைத்தம்பி கோவிலில் சாமியாராக இருந்து கொண்டு குறி சொல்லும் வேலை செய்து வருவதாகவும், பூஜை செய்வதற்காக, மான் தோலில் மேஜை செய்ய சென்னை சென்றதும் தெரிந்தது.
பின், சூணாம்பேடு போலீசார் மேற்கண்ட இருவரையும் கைது செய்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மான் தோல் கடத்தல் குறித்து, இருவரிடமும் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
துபாய் 67 அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீ விபத்து: 3,820 குடியிருப்பாளர்களும் பத்திரமாக மீட்பு
-
லண்டனில் வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை
-
தென் ஆப்ரிக்க அணி வரலாறு: டெஸ்ட் உலக கோப்பை வென்றது
-
ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!
-
அதிகமாக படியளப்பது மாநில அரசு: முதல்வர் ஸ்டாலின்
-
விமான விபத்தின் போது நடந்தது என்ன: கறுப்பு பெட்டி ஆய்வுக்கு பிறகு தெரியும் என மத்திய அமைச்சர் பேட்டி