லாட்ஜில் இறந்த பேராசிரியர்; போலீஸ் விசாரணை

திண்டிவனம் : திண்டிவனத்தில் லாட்ஜில் கல்லுாரி பேராசிரியர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவெண்ணைநல்லுார் அடுத்த இ.மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன், 59; திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் கணிதத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

திருமணம் ஆகாததால் திண்டிவனம், வண்டிமேட்டில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், சிவசங்கரன் அவருடைய அறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவரது தம்பி சிவக்குமார், 57; அளித்த புகாரின் பேரில், மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு காரணமா என திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement