லாட்ஜில் இறந்த பேராசிரியர்; போலீஸ் விசாரணை
திண்டிவனம் : திண்டிவனத்தில் லாட்ஜில் கல்லுாரி பேராசிரியர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணைநல்லுார் அடுத்த இ.மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன், 59; திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் கணிதத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
திருமணம் ஆகாததால் திண்டிவனம், வண்டிமேட்டில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், சிவசங்கரன் அவருடைய அறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அவரது தம்பி சிவக்குமார், 57; அளித்த புகாரின் பேரில், மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு காரணமா என திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துபாய் 67 அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீ விபத்து: 3,820 குடியிருப்பாளர்களும் பத்திரமாக மீட்பு
-
லண்டனில் வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை
-
தென் ஆப்ரிக்க அணி வரலாறு: டெஸ்ட் உலக கோப்பை வென்றது
-
ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!
-
அதிகமாக படியளப்பது மாநில அரசு: முதல்வர் ஸ்டாலின்
-
விமான விபத்தின் போது நடந்தது என்ன: கறுப்பு பெட்டி ஆய்வுக்கு பிறகு தெரியும் என மத்திய அமைச்சர் பேட்டி
Advertisement
Advertisement