கடை ஷட்டர் பூட்டு உடைத்து ரூ.1 லட்சம், போன்கள் திருட்டு

நீலாங்கரை, ஜூன் 14--
சென்னை, கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கேணியில், 'சென்னை மொபைல்ஸ்' ஷோரூம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 11:00 மணிக்கு, ஊழியர்கள் கடையை மூடி சென்றனர்.
நேற்று காலை ஷோரூம் மேலாளர் பிரேம்குமார், 30, கடையை திறக்க சென்றார். அப்போது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, நேற்று முன்தின விற்பனை தொகை 1.70 லட்சம் ரூபாய், விலை உயர்ந்த ஆறு ஐ - போன்கள், இரண்டு சாம்சங் மொபைல் போன்கள் ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துபாய் 67 அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீ விபத்து: 3,820 குடியிருப்பாளர்களும் பத்திரமாக மீட்பு
-
லண்டனில் வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை
-
தென் ஆப்ரிக்க அணி வரலாறு: டெஸ்ட் உலக கோப்பை வென்றது
-
ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!
-
அதிகமாக படியளப்பது மாநில அரசு: முதல்வர் ஸ்டாலின்
-
விமான விபத்தின் போது நடந்தது என்ன: கறுப்பு பெட்டி ஆய்வுக்கு பிறகு தெரியும் என மத்திய அமைச்சர் பேட்டி
Advertisement
Advertisement